முதலமைச்சர்கள் மாநாட்டில் விக்கியா, மாவை தொடர்ந்தும் எதிர்ப்பு!

முதலமைச்சர்கள் மாநாட்டில் விக்கியா, மாவை தொடர்ந்தும் எதிர்ப்பு!

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் வட­மா­காண முத­ல­மைச்­சரை பங்­கேற்கச் செய்­வ­தற்கு அர­சாங்கம் எடுத்து வரும் முயற்­சி­யினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்:- அமைச்­ச­ரவை கூட்­டத்தில் வட­மா­காண முத­ல­மைச்­சரை கலந்து கொள் ளச் செய்­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­யா­னது தங்கள் ஒற்­றை­யாட்சி சிந்­த­னையை ஏனைய தேசிய இனங்கள் மீதும் திணிக்கும் முயற்­சி­யாகும்.

ஜன­நா­யகப் பண்­பு­க­ளுக்கு மக்­க­ளாக இருந்­தாலும் சரி அர­சாங்­க­மாக இருந்­தாலும் சரி மதிப்­ப­ளிப்­பது அவ­சியம். மக்கள் ஒரு முக­மாக தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தங்கள் வாக்­கு­களை வழங்­கி­யுள்­ளனர். இதனை உணர்ந்து அர­சாங்கம் அர­சியல் தீர்­வுக்கு இட­ம­ளிக்­க­வேண்டும்.

வட­மா­கா­ண­ச­பைக்கு மக்கள் வழங்­கிய தீர்ப்பின் பிர­காரம் மக்­களின் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அர­சாங்­கத்­துடன் பேசி ஒன்­று­பட்டு செயற்­பட நாம் சித்­த­மா­கவே உள்ளோம். அதே­வேளை தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு அவற்றை தீர்க்க அர­சாங்கம் ஆக்­க­பூர்­வ­மான நட வடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

வெறுமனே தங்கள் கருத்துக்களையும் அதிகாரத்தையும் வடமாகாணசபையில் திணிப்பதற்கு அரசாங்கம் முனையக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published.