நாவற்குழியில் நூறு சிங்களக் குடும்பங்களுக்கு காணி ஆவணங்கள்?!

நாவற்குழியில் நூறு சிங்களக் குடும்பங்களுக்கு காணி ஆவணங்கள்?!

யாழ். நாவற்­குழிப் பகு­தியில் வசிக்­கின்ற தமிழ் மக்கள் தமது காணி­களை அளந்து அதற்­கு­ரிய ஆவ­ணங்­களை உட­ன­டி­யாக வழங்­க­வேண்டும் எனவும் தவறின் தாம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரி­வித்­தனர்.

தமக்­கு­ரிய காணி­களை அளந்து ஆவ­ணங்கள் வழங்­கப்­படும் என இரா­ணு­வத்­தினர் தெரி­வித்து வரு­கின்ற பொழுதும் அர­சாங்க அதி­கா­ரி­களும் சில அர­சி­யல்­வா­தி­களும் திட்­ட­மிட்ட வகையில் காணி­களை வழங்­காது காலம் தாழ்த்­து­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

இவ்­வி­டயம் தொடர்­பாக அப்­ப­குதி மக்கள் மேலும் தெரி­விக்­கையில்,

நாங்கள் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக இப்­ப­கு­தியில் மீளக்குடியேறியுள்ளோம். எமக்கு இப்­ப­கு­தியில் குறித்த காணிகளில் வசிப்பதற்கான அனுமதியை கிராம சேவை­யாளர் வழங்­கி­யுள்ளார்.

கடந்த நான்கு வரு­டங்­க­ளாக எமது காணி­களை அளந்து ஆவ­ணங்­களை வழங்­காது அர­சாங்க அதி­கா­ரி­களும் தொடர்­பு­டைய அர­சி­யல்­வா­தி­களும் காலம் தாழ்த்தி வரு­கின்­றனர்.

ஆனால், எமக்கு அருகில் தற்­பொ­ழுது குடி­யே­றி­யுள்ள சிங்­கள மக்­க­ளுக்கு இரா­ணு­வத்­தி­னரும் பொலி­ஸாரும் பாது­காப்பு வழங்­கு­வ­துடன் காணிகள் அளக்­கப்­பட்டு அதற்­கு­ரிய ஆவ­ணங்­களும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த காலங்­களில் இப்­ப­கு­தியில் ஐந்து சிங்­களக் குடும்­பங்கள் மட்டும் வசித்து வந்த நிலையில் தற்­பொ­ழுது சுமார் நூறு வரை­யான குடும்­பங்கள் கு­டி­யே­றியுள்­ளன. இவர்­களில் சக­ல­ருக்கும் காணி­க­ளுக்­கு­ரிய ஆவ­ணங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் எமக்கு மின்சாரம், குடிநீர், போக்குவ­ரத்து வச­திகள் எது­வு­மின்றி கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அருகிலுள்ள சிங்களக் குடியேற்­றத்தில் வசிப்போருக்கு சகல வசதிகளும் இரா­ணு­வத்தின் ஏற்­பாட்டில் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

காணிகளை அளந்து ஆவணங்களை எமக்கும் வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளிடம் நாம் கோரி­யுள்ளோம். ஆனால் யாருமே எமக்கு உத­வ­வில்லை.

இன்று (நேற்று) காணி­களை அளந்து வழங்­கு­வ­தாக இரா­ணு­வத்­தினர் எம்­மிடம் தெரி­வித்­தனர். ஆனால், எந்தவொரு அதிகாரியும் இவ்விடத்துக்கு வரவில்லை.

எனவே, எமக்கான காணிகளுக்குரிய ஆவணங்களை விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறின் நாம் சாகும் வரையிலான போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.