கமெரூனை கூட்டமைப்பு சந்திக்கும்!

பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு இலங்கை செல்லும் பிரித்­தா­னிய பிரதமர் டேவிட் கமெ­ரூனை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் சந்­தித்து பேச­வுள்­ளனர். இந்த சந்­திப்­பிற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது இடம்பெற்று வரு­கின்­றன. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான எம்.பி. க்கள் குழு­வி­னர் இந்தச் சந்­திப்பில் பங்­கேற்­க­வுள்­ளனர்.பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொள்­ளப்­போ­வ­தில்லை என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. அத்­துடன் இந்த மாநாட்­டிற்கு வரும் வெளிநாட்டுத் தலை­வர்­களை சந்­தித்து இலங்­கையின் தற்­போ­தைய நிலை குறித்தும் நாட்டில் இடம் பெற்ற, இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறை­யி­டு­வ­தற்கும் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்­துள்­ளது. இதன் ஒரு கட்­ட­மா­கவே பிரித்­தா­னியப் பிர­த­மரை சந்­திப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இது குறித்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கருத்துத் தெரி­விக்­கையில்:-

பொது­ந­ல­வாய மாநாட்­டிற்கு வரும் வெளிநாட்டுத் தலை­வர்­களை சந்­திப்­ப­தற்கு நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். இதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. பிரித்­தா­னியப் பிர­த­மரை நாம் சந்­திக்­க­வுள்ளோம். இதற்­கான ஏற்­பா­டு­களை பிரித்­தா­னிய தூத­ரகம் மேற்­கொண்­டுள்­ளது.

இதேபோல் வேறு பல தலை­வர்­க­ளையும் சந்­திப்­ப­தற்கு முயல்­கின்றோம். யார். யாரை சந்­திப்போம் என்­பது தொடர்பில் தற்­போது கூற­மு­டி­யாது உள்­ளது. அதற்­கான ஏற்­பா­டுகள் இடம் பெறுகின்றன.

இந்த சந்திப்புக்களின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், தற்போ தைய நிலை குறித்தும் ஆவண ங்களை கையளிப்போம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.