Search

உத்தியோகபூர்வமாக ஏற்றிவைக்கப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி!

ஒஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை (20-04-2012) மாலை Geelong தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு Tim Gordon அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியை, அலுவலகக் கட்டிட உச்சியில் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒஸ்திரேலிய வெள்ளை இனமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

கொடியேற்றுதலுக்கு முன்னதாக, தமிழீழத் தேசியக் கொடி உருவான வரலாற்றுப்பின்னணி குறித்தும், தேசியக் கொடி குறித்தும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு சபேசன் எடுத்துரைத்தார்.

நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களங்கள் விவரணப்படம் திரையிடப்பட்டது. இவ்விரணப்படத்தைப்பார்த்து கவலையுற்ற பார்வையாளரின் கேள்விகளுக்கு சபேசன் பதிலளித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *