பிரித்தானியாவில் சிறுமிகளை கடத்தி கற்பழித்த 5 பேருக்கு தலா 54 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் ஸ்டெனோ மிர்சா(18), ஹசன் அப்துல்லா(33), ரெனேடோ பலோக்(18), ஜன் காண்ட்ராக்(17) மற்றும் ராபர்ட்(14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 12 முதல் 14 வயது மதிக்கத்தக்க 5 சிறுமிகளை கடத்தி கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இதன்பின் பொலிசார் நடத்திய விசாரணையில், மேலும் பல சிறுமிகளை ஏமாற்றி மிக கொடூரமாக கற்பழித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், 5 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, தலா 54 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.