மே 18. தமிழர்கள் அழுதுதீர்ப்பதற்கான துயரநாளல்ல.
எமது தாய் நிலம் எங்கள் சொந்த மண் மீளவும் சிங்களத்திடம் பறிபோன நாள்.
எங்கள் தாயகம் விடுதலை அடையும்வரை தாயகக் கனவை நெஞ்சில் சுமந்து உறுதிகொண்ட நாள்.
இதனை மீளவும் யாழ் பல்கலைக்கழக சமூகம் நிலைநிறுத்தியுள்ளது.
வலிகள் தந்த வாரம் மே – 18, இன்று உணர்வுபூர்வமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் விதையாகி வீழ்ந்த தமது உறவுகளை நினைந்து மெழுகுதிரிகள் ஏற்றி அஞ்சலி செய்தனர் என சங்கதி24 ( www.sankathi24.com)செய்தியாளர் தெரிவிக்கின்றார்..
இது இவ்வாறிருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இன்று (18) காலை 8.30 அளவில் யாழ். கலட்டிப் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த செயலாளர் தர்ஷானந் யாழ் வைத்தியசாலையின் அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இத்தாக்குதலுக்கு இராணுவத்துடன் இயங்கும் துணைக்குழுவே காரணம் என யாழ் பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.