வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(01.07.2012) பல்லாயிரம் மக்கள் கூடப்போகின்ற ஒரு பெரும் விழாவாக அமைய இருக்கின்ற கோடைவிழாவின் சிறப்பம்சங்களில் மிகமுக்கியமானது வல்வையின் பாரம்பரிய முறையிலான உணவுத்தயாரிப்பும் சுவையும்தான்.
அதற்கான வேலைகள் நான்குவாரத்துக்கு முன்னரேயே ஆரம்பித்துவிட்டன.கொத்துரொட்டிக்கான ரொட்டிகள் வீசப்பட்டு சுடப்பட்டு பதப்படுத்தபடுகின்றன.அதனைபோலவே ரோல்ஸ் செய்யும் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன.கடந்த சிலநாட்களாக ஏராளமானவர்கள் இந்த வேலையில் தம்மையும் இணைத்துள்ளார்கள்.தமது வேலைகளையும் நேரங்களையும் இதற்காக ஒதுக்கி வந்து இந்த வேலைகளை செய்தவர்களுக்கும் செய்துகொண்டிருப்பவர்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுகளும்.
இதனைபோலவே வேறு வேலைகளும் மைதானத்தில் உள்ளன.அதற்கான தொடர்பு இலக்கங்களுடன் தொடர்புகொண்டால் அவர் அவர்க்குரிய வேலைகளை செயற்பாடுகளை நிர்வாகத்தினர் வழங்குவார்கள்.
தொடர்புகட்கு:
த.உதயணன்(தலைவர்):07578086782
பா.ஞானச்சந்திரன்(ஞானம்)(செயலாளர்):07740463223





