வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறையில் சிவராத்திரி அன்று திருட்டுச்சம்பவம் நிகழ்ந்துள்ளது

வல்வெட்டித்துறையில் சிவராத்திரி அன்று திருட்டுச்சம்பவம் நிகழ்ந்துள்ளது 17.02.2015 இரவு 10-11 மணிக்கிடையில் வல்வை நெடியகாட்டை வசிப்பிடமாக கொண்ட ஞானசுந்தரம் வனிதாதேவி (சின்னக்கிளி) 65 வயதுடைய முதியவர் தனியாக இருந்த நேரம் பார்த்து வீட்டிற்கு புகுந்த இனம் தெரியாத வெள்ளைத்_யால் வாய் மூக்குப்பகுதியை கட்டியிருந்த நபர் மிரட்டி நகைகளை கழட்டி தருமாறு வெறுட்டிவிட்டு வெளியில் சென்று மீண்டும் வந்து சத்தம் போடா சத்தம் போடாதே நாங்கள் நாலு பேர் ஆமியாற்கள் வந்திருக்கன்றோம் சத்தம் போட்டால் சுடுவம் என்று மிரட்டி காதில் இருந்த தோட்டையும் கழட்டி கழுத்தில் இருந்த 8 பவுண் தாலிக்கொடியையும் கழுத்தை பிடித்து அடித்தது முதுகில் உதைந்தும் முதியவரிடம் இருந்த தாலிக்கொடியை அபகரித்துச்சென்றுள்ளார் . முதியவரின் கழத்துப்பகுதியில் நெரிவட்ட கண்டல் காயங்கள் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது இதுதொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸரிட் முறைப்பாடு செய்ய்பட்டுள்ளது வல்வெட்டித்துறை இராணுவத்தினரும் இது தொடர்பான முறைப்பாட்டினை விசாரித்து சென்றுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *