தமிழீழத் தேசிய செயற்பாட்டிலும், வல்வையின் வளர்ச்சியிலும் அரும்பாடு பட்டு உழைத்து அனைத்து மக்களின் நெஞ்சில் இன்று வரை நிலைத்து நிற்கும்,
“பைலட் ஞானம்” அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட போட்டிகள் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
பைலட் ஞானத்தின் புதல்விகள் இருவரும் மங்கள விளக்கேற்ற, அதனைத் தொடர்ந்து வல்வை ரெயின்போஸ் வி.கழக மூத்த உறுப்பினரும், லண்டன் வல்வை புளூஸ் வி.கழக முன்னாள் தலைவருமான திரு. ஜெகன் அவர்கள் பிரித்தானியத் தேசியக்கொடியையும், அதனைத் தொடர்ந்து மூன்று மாவீரர்களின் சகோதரரான திரு .சேகர் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியையும் ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.