என்று உன் வீடிற்கு வந்தாலும்
எழுந்து வந்துவரவேர்க்கும் நீ ,
இன்றுமட்டும்
இப்படி உறங்குகிறாய் ?
எழுந்து வாங்கள் குடும்பத்தினர் என
ஏக்கமாய் அழைக்கிறோம் ,
எதையும் காணததுபோல்
எழுந்துவர மறுக்கிறாயே ! கள்ளமில்லா உன் முகத்தை
கட்டிலிலே கண்டவேளை
கலங்கி நின்றே எண்ணிக்கொண்டோம்
கயவன் அந்த கடவுள் என்று…
நீ ஒருமுறை மரணித்தாய் – இனி
உன் நினைவுகள் வரும் நேரங்களில் – நாங்கள்
ஒவ்வொரு முறையும் மரணிப்போமே..
நீ எங்களைவிட்டு செல்லவில்லை
எங்கள் நினைவுகளில் தங்கிவிட்டாய் .
உன் ஆன்மா சாந்திகொள்ள
தமிழன்னை அவள் தயை புரிவாள் ………. குடும்பத்தினர் ஆதிகோவிலடி வல்வெட்டடித்துறை

Previous Postகனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் இரண்டாம் நாள் நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது 14.10.2015
Next Postவல்வை மிருதங்க கலைஞர் வல்வை வசந்த் அவர்களின் நன்றி தெரிவித்தல்