வடக்கு, கிழக்கில் மழை – வளிமண்டலவியல் தினைக்களம்
அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக மழை அல்லது இடியுடன் கூடிய மழை (Showers or thundershowers) பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தினைக்களம் (Department of meteorology, Srilanka) அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் தினைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மன்னார். காங்கேசன்துறை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் இடையிடையே மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது .