டெல்லி மாணவி கற்பழிப்பை கண்டித்து பாகிஸ்தானில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

டெல்லி பாரா மெடிக்கல் கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு பலியானதை கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெண்கள் அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்த படுபாதக செயலை செய்தவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டி, போராட்டம் நடத்தி வரும் இந்திய சமூக அமைப்பினருக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்தியப் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதோடு மட்டுமில்லாமல், உலக பெண்களுக்காவும் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை களைய இந்திய – பாகிஸ்தான் ஊடகங்கள் உதவிட வேண்டுமெனவும் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

பெண்கள் வியாபாரப் பொருட்கள் அல்ல. அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை ஆண்கள் மற்றும் சிறுவர்களிடையே புரியவைக்க கல்வி அவசியம் தேவை என்றும் அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.