அமெரிக்காவின் கனெக்டிக்கட் நகரில் உள்ள சாண்டி ஹுக் தொடக்கப்பள்ளிக்குள் நுழைந்த ஓர் வாலிபன், மாணவ – மாணவிகளை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.கடந்த மாதம் 14-ம் தேதி நடத்த இந்த கொடூரத் தாக்குதலில் 20 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 27 பேர் பலியாகினர்.

பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தன. இச்சம்பவம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அமெரிக்காவின் துப்பாக்கி உரிமம் வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வேண்டும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு, மூடிக் கிடந்த சாண்டி ஹுக் பள்ளி, இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றின் மூலமாகவும், பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பீதியிலிருந்து விடுபடாத தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் தைரியம் கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நினைவுகள், மாணவ – மாணவிகளுக்கு தோன்றாத வகையில், மேஜை நாற்காலிகளின் வரிசை மாற்றப்பட்டு, அழகிய சுவரோவியங்களுடன் கூடிய வர்ணப்பூச்சுடன், சாண்டி ஹுக் பள்ளி புதுப்பொலிவுடன் காணப்பட்டுகின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *