இராணுவத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்து படைத்தரப்பால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட யுவதிகளை இராணுத்தளபதியின் மனைவி சந்தித்து கலந்துரையாடியதாகவும் படைத்தரப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.













