வல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

யாழ். வல்வெட்டித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் நேற்று காணமல்போயுள்ளர்.

வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த இரு மீனவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். கடற்பரப்பில் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை

பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த ஆறுபடகுகளில் 12 மீனவர்கள் உள்ளதாகவும், தற்போது இரண்டு படகுகள் கரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.