Search

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 2 பேர் குத்திக் கொலை

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 2 பேர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் மத்திய பிர்மிங்காம் பகுதியில் மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் உள்ளது. இங்கு கடந்த 11ஆம் திகதி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், 2 பேரை கத்தியால் சரமாரியாக குத்தினார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றும் காப்பாற்ற முடியாமல் போனது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இறந்தவர்கள் 2 பேரும் வீடு இல்லாதவர்கள் என்றும், வீதிகளில் தி பிக் இஷ்யூ என்ற இதழை விற்று பிழைத்து வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த இதழின் ஆசிரியர் ஜான் பேர்ட் கூறுகையில், வீடு இல்லாமல் தவிப்பவர்களை எதற்காக கொலை செய்தனர் என்பது புரியாத புதிராக உள்ளது என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *