குர்திஸ் பெண் போராளிகளின் வித்துடல்களுக்கு தமிழர் அமைப்புக்களின் வீரவணக்கங்கள்

கடந்த 09.01.2013 பாரிசில் படுகொலை செய்யப்பட்ட குர்திஸ் பெண் போராளிகளின் வித்துடல் 15.01.02013 அன்று வில்லியே லூபெல் என்னும் இடத்தில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.

மதியம் வரை 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட குர்திஸ்தான் மக்கள் பல நாட்டு மக்கள் தமது வணக்கத்தை தெரிவிந்திருந்தனர்.

இதில் தமிழீழ மக்கள் சார்பில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சென்று கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து தமது வீரவணக்கத்தை தெரிவித்திருந்தனர்.

குர்திஸ்தான் மக்கள் எம்மவர்களை கண்டு பலத்த ஆதரவுக்கோசம் எழுப்பியிருந்தமையும் பல ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published.