எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம்.

எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம்.

எழுக தமிழ் நிகழ்வு  நல்லூரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இப்பேரணியில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டுள்ளனர்.

 

 

 

 

 

 

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மற்றையதொரு பேரணியும் யாழ் முற்றவெளி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

 

 

 

 

 

 

 

தமிழ் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக  யாழ். நகரப்பகுதியில்   அமைந்துள்ள கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் . மற்றும்  தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், என்பனவும்  மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.