தமிழ் நாடு திருச்சியில் சட்லையிட் போனினை பயன்பாடுத்திவந்த வல்வெட்டித்துளை இளைஞனை கியூ பிரிவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
திருச்சி தூத்துக்குடி தேனீர் பட்டி அருகே வசித்து வந்த 34 அகவையுடைய ராமச்சந்திரன் கோழிப்பண்ணை அமைத்துக்கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார் இவர் அதிநவீன சட்லையிட் போன் பயன்படுத்தி வருவதாக கியூபிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து அவரை கைதுசெய்துள்ளார்கள்.
விசாரணையின் போது ராமச்சந்திரன் அவுஸ்ரேலியா குடியுரிமை பெற்றிருந்ததாகவும்
இவரது பூர்வீகம் இராமேஸ்வரம் என்றும் இவர் வல்வெட்டித்துறையில் வசித்துவந்து பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு சென்று குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்லையிட் போன் தடைசெய்யப்பட்டுள்ள போனை கடந்த ஒன்றரை மாதங்களாக இவர் பயன்படுத்திவந்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இவர் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்கேத நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாகவும், அவரை எதிர்வரும் 6ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நாகலக்ஷ்மி உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *