வல்வை செய்திகள்

மனப்பட மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா வல்வையில் வரும் சனிக்கிழமை

ஆசிரியர் கி.செல்லத்துரையால் எழுதிய மனப்பட மனிதர்கள் என்ற நூல் வல்வையில் வெளியீடு செய்யப்பட இருக்கிறது.

இந்த நூலானது வல்வையில் கடந்த ஐம்பது வருட காலத்தில் சிறப்புடன் வாழ்ந்த பதினைந்து பேரின் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளைக் கொண்டதாகும்.

விஜய் அச்சகம் இந்த நூலை அச்சுப்பதிப்பு செய்துள்ளது, ரியூப் தமிழ் இணையம் வெளியீடு செய்கிறது.

இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 12.11.2016 சனிக்கிழமையன்று பி.ப. 3.00 மணியளவில் வல்வை யா.அ.மி.த.க பாடசாலை விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

விழாவின் விருந்தினர்கள் பாடசாலை பான்ட்வாத்திய அணியினால் வரவேற்று மண்டபம் அழைத்துவரப்படுவார்கள்.

நிகழ்வின் தலைமை : கவிஞர் இ.த.ஜெயசீலன் – பிரதேச செயலர் பிரதேச செயலகம் பருத்தித்துறை

முதன்மை விருந்தினர் : கௌரவ ஆ. நடராஜன் இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணம்.

பிரதம விருந்தினர் : கௌரவ சி.வி.கே சிவஞானம் அவைத்தலைவர் வடமாகாண சபை வடமாகாணம்.

சிறப்பு விருந்தினர்கள் :

திரு.எம்.கே.சிவாஜிலிங்கம்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )

திரு.சு.சுகிர்தன்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )

திரு. கே.சயந்தன்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )

திரு. வே. சிவயோகம்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )

திரு.சு.தர்மலிங்கம்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )

திரு.இ.ஆர்நோல்ட்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )
ஆகியோர் பங்கேற்க ஆரம்பமாகும் நிகழ்ச்சி நிரல் :

01. விருந்தினர் வரவேற்பு

02. மங்கள விளக்கேற்றல்

03. அகவணக்கம்

04. வரவேற்பு நடனம் : பாஸ்கரன் கோகிலா

05. வரவேற்புரை : தமிழ் பெண் விமானி. அர்ச்சனா செல்லத்துரை ( சிறப்பு காணொளி வழியாக )

06. வாழ்த்துரை : திரு. முத்துக்குமார் தங்கவேலு ( தங்கவேல் அண்ணா )

07. ஊரவர் உரை : திரு. ச.க.தேவசிகாமணி ( கட்டி அண்ணா )

08. சிறப்பு வாழ்த்துச் செய்தி : வஸந்த் செல்லத்துரை ( சிறப்பு காணொளி வழியாக )

09. சிறப்பு வாழ்த்துச் செய்தி : ரவிசங்கர் சுகதேவன் ( சிறப்பு காணொளி வழியாக )

10. நூல் முன் அறிமுக உரை : கவிஞர். கம்பிகளின் மொழி பிறேம்

11. நூல் வெளியீடு

12. சிறப்புப் பிரதி வழங்கல்

13. நூல் ஆய்வுரை : திரு. அப்பாத்துரை மாஸ்டர்

14. சிறப்பு விருந்தினர் உரை

15. பிரதம விருந்தினர் உரை

16. முதன்மை விருந்தினர் உரை

17. பரிசளிப்பு கௌரவம் அளித்தல்

18. ஏற்புடன் கூடிய நன்றியுரை : நூலாசிரியர்

நிகழ்ச்சித் தொகுப்பு : கவிஞர் யோ. புரட்சி

மண்டபத்தில் இருந்து இணையம் வழியாக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

நிகழ்ச்சி அனுசரணை : ரியூப் தமிழ் இணையம்

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீhர்கள்.

பிரவேசம் இலவசம்.

தகவல் : விழா ஏற்பாட்டுக்குழு.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *