வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினால், பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டி நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில், நேற்று (28.01.2013 )ஆரம்பிக்கப்பட்டது

வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினால், பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டி நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில், நேற்று (28.01.2013 )ஆரம்பிக்கப்பட்டு இதன் முதற்சுற்றுப் போட்டியானது லீக் முறையில், முதலாவது ஆட்டம் வல்வை இளங்கதிர் விளையாட்டக் கழகத்தை எதிர்த்து, வல்வை தீருவில் விளையாட்டக் கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் இளங்கதிர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது. அடுத்து நடந்த ஆட்டத்தில் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் மோதியது, இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சைனிங்ஸ் விளையாட்டக் கழகம் வெற்றியீட்டியது.

இன்று நடைபெற உள்ள இரு ஆட்டங்கள்

1.வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்ட வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகம்
2. வர்ழவ நேதாஜி விளையாட்டுக் கழகத்தை எதிரித்து வல்வை தீருவில் விளையாட்டுக் கழகம்

Leave a Reply

Your email address will not be published.