சாண்டி தீவு (SANDY ISLAND) என்ற பெயரில் உலக வரைப்படத்தில் உள்ள இந்த தீவு ஆஸ்திரேலியாவுக்கும் மற்றும் பிரான்ஸ் கட்டுப்பாட்டிலுள்ள நியூ கேளடோனியா என்ற தீவுக்கூட்டத்துக்கும் இடையில் அமைந்திருக்கும். ஆனால் அந்த கடல் பகுதிக்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சென்று தேடி பார்த்த போது, அங்கே தீவு எதுவும் இல்லை கீழே பவழப் பாறைகளுடன் ஆழ்கடல் தான் இருந்துள்ளது.
தீவு தெரியும் என்று எதிர்பார்த்து போனால், ஆயிரத்து நானூறு மீட்டருக்கும் அதிகமான ஆழமான கடல் பகுதி தான் அந்த இடத்தில் இருந்தது என்று கப்பலில் சென்று பார்த்த விஞ்ஞானி மரியா செடன் என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த தீவு உலக வரைபடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







