புலிகளால் பயன்படுத்தப்பட்ட இரணைமடு ஓடுபாதையின் புனரமைப்பு பணிகள் தீவிரம்

கிளிநொச்சி இரணைமடுவில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது இந்த புனரமைப்புப் பணிகள் 75 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1500 மீற்றர் நீளம் வரை விரிவாக்கப்பட்டுள்ள இந்த ஓடுபாதை இரணைமடு விமானப்படை ஓடுதளம் என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமான ஓடுபாதையானது வர்த்தக, இராணுவத் தேவைகளுக்குப் பயன்படத்தக்க வகையில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.