வல்வை செய்திகள்

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாடடுக் கழக மைதானத்தில் நடைபெற்ற பத்தொன்பது வயதுற்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட அரையிறுதிப் போட்டி

இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாடடுக் கழக மைதானத்தில் பத்தொன்பது வயசு பிரிவினருக்கான உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டங்கன் நடைபெற்றன.
முதல் விளையாடிய அணிகளான வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ,வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகம் மோதியது. இதன் புள்ளிவிபரங்கள் 2:0 என்ற கோல் கணக்கில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
மற்றய ஆட்டமான வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்திற்கும், வல்வை சைனீங்ஸ் விளையாட்டுக் கழகத்திற்குமான போட்டியில் நேதாஜி விளையாட்டுக் கழகம் போட்டிக்கு வராத காரணத்தினால் போட்டி ஏற்பாட்டாளர்களினால் வல்வை  சைனீங்ஸ்  விளையாட்டுக் கழகத்தினருக்கு வெற்றி வழங்கப்பட்டது,
கிடைக்கப் பெற்ற முடிவுகளின் படி வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *