நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்?

நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்?

.
இன்றைய காலக்கட்டத்தில் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வதை விட கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் தான் அதிகம். அதிலும் தற்போது ஐடி நிறுவனங்கள் அதிகம் வந்து விட்ட நிலையில், பகல், இரவு பாராமல் நாள்முழுவதும் கணினி முன் அமர்ந்து வேலை செய்கின்றனர்.

இதனால் உடலில் வராத நோயும் சுலபமாக வந்து விடும். ஒரே இடத்தில் தொடர்ந்து பல மணி நேரம் உட்காருவதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றது. என்னவென்று பார்க்கலாம் வாங்க……

தொடர்ந்து எட்டு அல்லது பத்து மணி நேரம் உட்காருவதால் முதுகு வலி அதிகம் ஏற்படுகிறது. உடலில் எந்த அசைவும் இன்றி ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்காருவதால் தசைகள் மறுத்து முதுகு வலி ஏற்படுகிறது. ஆகவே ஒரே இடத்தில் உட்காராமல் உடலுக்கு அசைவு கொடுக்க முதுகு வலியை தவிர்க்கலாம்.

அதன் பிறகு நீரிழிவு நோய், தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காருவதால் இன்சுலின் பெரும்பாலும் குறைந்து நீரிழிவு பிரச்னை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் பாதிக்கிறது. ஆகவே பெண்கள் அலுவல வேலையை  தவிர மற்ற நேரங்களில் வீட்டில் உள்ள வேலைகளை செய்யலாம். மேலும் அலுவலங்களில் நீண்ட நேரம் உட்காருவதை தவிர்த்து சிறிது நேரத்திற்கு ஒரு முறை உடலுக்கு அசைவு கொடுக்கலாம்.

சில சமயங்களில் தீராத கழுத்து வலி ஏற்படும். அவ்வாறு இருக்கும் போது உடனே மருத்துவரை அணுகி அதற்கான அணுகுமுறையை பின்பற்றலாம். சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும். ஒரே இடத்தில் உட்காருவதால் ஜீரண சக்தி குறைந்து அஜீரணக் தண்மை எற்படும். அதிக நேரம் கணினியை உற்று நோக்கும் போது கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஆகிய பிரச்னைகளும் ஏற்படும். இதற்கு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை கண்களால் மூடி ஓய்வு கொடுக்கலாம், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களை சிமிட்டலாம்.

இவ்வாறு நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு அசைவு கொடுக்கலாம். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் உடல் நல்ல ஆரோக்கியம் பெருவதோடு நீண்ட காலம் நோயில்லாமல் வாழலாம்

Leave a Reply

Your email address will not be published.