பயங்கரவாதி என்றால் யார்? வரைவிலக்கணம் கேட்டார் சுமந்திரன்:
தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர், இந்திய அரசால் தேடப்படுபவர் மற்றும் குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர்களுக்கெல்லாம் அரசு சம்பளம் வழங்கும் நிலையில் பயங்கரவாதி என்றால் யார் என்பதற்கு வரைவிலக்கணம் அவசியமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது
ஒருவரின் கண்ணோட்டத்தில் பயங்கரவாதியாகத் தெரிபவர் இன்னொருவரின் பார்வையில் விடுதலை வீரராகத் தெரிவார். பாலஸ்தீனப் பேராட்டத்தை ஆதரிக்கும் நிலை இலங்கையர்களில் உள்ளது. எனவேதான் பயங்கரவாதி என்பதற்கு சரியான வரைவிலக்கணம் தேவை.
சர்வதேச ரீதியில் கூட பயங்கரவாத செயல்களுக்கு வரைவிலக்கணம் ஓரளவு உள்ள போதும் பயங்கரவாதி என்பதற்கு இல்லை எனத் தெரிவித்தார்.
பயங்கரவாதி என்றால் யார்? சரியான விளக்கம் கோரி எதிர்க்கட்சிகள் கூக்குரல் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது:
இன்று பயங்கரவாதியாக இருப்பவர் நாளை போராட்ட வீரராக போற்றப்படலாம். எனவே பயங்கரவாதி என்பதற்கு சரியான வரைவிலக்கணம் அவசியம் என்று வலியுறுத்திய ஐ. தே. கயின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டை தற்போது அரச பயங்கரவாதம் விழுங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் தொடர்ந்தும் குறிப்பிடுiகியல்.
பயங்கரவாதி யார் என்பதற்கு சரியான வரைவிலக்கணமின்றி கொண்டுவரப்படும் இச்சட்ட மூல திருத்தத்தை ஏற்க முடியாது. யசீர் அரபாத் முதலில் பயங்கரவாதியாகத் திரிக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவர் போராட்ட வீரராக வரலாற்றில் பதியப்பட்டார். எனவே பயங்கரவாதி என்பதற்கு சரியான வரைவிலக்கணம் அவசியம்.
இன்று இலங்கைக்குள் பாரிய பிரச்சினை அரச பயங்கரவாதம். இதனால் இன்று நாடு விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டுடன் புலிகளுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. ஆனாலும், அதன் பின்னரும் ஆட்கள் காணாமல் போகின்றார்கள்.
கொலை செய்யப்படுகின்றார்கள். வெள்ளைவான்கன் திரிகின்றன. பலர் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர் இது அனைத்துக்கும் அரச பயங்கரவாதமே காரணம், எனவே அரச பயங்கரவாதத்திற்கே முதலில் முடிவு கட்ட வேண்டும்.
17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட்டு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது கூட ஒரு அரச பயங்கரவாதமே.
இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிட முடியுமென ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்றார். அப்படி வர முற்பட்ட சர்வதேச சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நவநீதம் பிள்ளைக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. ஐ. நா. விசேட குழுவினருக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இது அரசின் இரட்டை நிலைப்பாடு. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.
இந்த நாட்டில் தொலைபேசி மூலம் அச்சுறுத்தப்படாத ஒரு நிறுவனமாக நீதிமன்றம் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பத்துக்கு அமைய தீர்ப்புகளை வழங்கும் நிறுவனமாக அது மாற்றப்பட்டு விட்டது. இந்த நாட்டில் தற்போது அரச பயங்கரவாதம் உள்ளது. அதுதான் உண்மை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர், இந்திய அரசால் தேடப்படுபவர் மற்றும் குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர்களுக்கெல்லாம் அரசு சம்பளம் வழங்கும் நிலையில் பயங்கரவாதி என்றால் யார் என்பதற்கு வரைவிலக்கணம் அவசியமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கான நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.
ஒருவரின் கண்ணோட்டத்தில் பயங்கரவாதியாகத் தெரிபவர் இன்னொருவரின் பார்வையில் விடுதலை வீரராகத் தெரிவார். பாலஸ்தீனப் பேராட்டத்தை ஆதரிக்கும் நிலை இலங்கையர்களில் உள்ளது. எனவேதான் பயங்கரவாதி என்பதற்கு சரியான வரைவிலக்கணம் தேவை.
சர்வதேச ரீதியில் கூட பயங்கரவாத செயல்களுக்கு வரைவிலக்கணம் ஓரளவு உள்ள போதும் பயங்கரவாதி என்பதற்கு இல்லை எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.










