நான் நானாக நல்வழியில் வாழவே
நான் ஏன்
பிறரைப் போல பேச வேண்டும்!
பிறரைப் போல ந(டி)டக்க வேண்டும்!
பிறரைப் போல சிந்திக்க வேண்டும்!
பிறர் போடும் தாளத்திற்கு ஆடுவதில்
எனக்கு உடன்பாடில்லை! – ஏனெனில்
எனக்கென்று தெளிந்த மனமுண்டு!
என் சிந்தனைத் திறனுமுண்டு!
’கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து’. – குறள் 130
நான் நானாக நல்வழியில் வாழவே
இப்பூமியில் பிறந்தேன்.