வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம் இன்று வல்வை விளையாட்டு கழக முன்னால் தலைவர் திரு மு.தங்கவேல் தலைவர் திரு மு.பிறேம்குமார் அவர்களினாலும் உத்தியோக பூர்வமாக இன்று காலை 09.45 மணியளவில் மைதானத்தின் பெயர்ப்பகை திறந்து வைக்கப்பட்டு ஒரு நாள் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும் நடாத்தப்பட்டது இதில் வல்வைக்குட்பட்ட 7 விளையாட்டுக்கழகங்களும் பங்கு பற்றி அரை இறுதி போட்டிக்கு வல்வை உதயசூரியன் வி.க எதிர் வல்வை நேதாஜி வி.க மற்றும் வல்வை ரேவடி வி.க எதிர் இளங்கதிர் வி.க தெரிவு செய்யப்பட்டு அரையிறுதி போட்டி ஆரம்பாகி முடிவடைந்த போட்டியில் இறுதி போட்டிக்கு வல்வை நேதாஜி வி.க 2:1 என்ற கோல்கணக்கிலும் வல்வை ரேவடி வி.க தண்டா உதை மூலமும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு மாலை 5.30 மணிக்கு வல்வை நேதாஜி வி.க எதிர் வல்வை ரேவடி வி.க மோதி இரண்டு அணிகளும் ஒவ்வொரு கோலினை போட்டு சமனிலையை அடைந்தது தொடர்ந்து நடுவரினால் தண்டா உதை வழங்கப்பட்டு வல்வை ரேவடி வி.க வெற்றி பெற்றது இதனைத்தொடர்ந்து பரிசில் வழங்கும் விழா நடைபெற்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கும் கழகங்களுக்கும் வல்வை வி.க தலைவர்களும் இளங்கதிர் வி.க தலைவர்களும் கேடயங்கை வழங்கி கௌரவித்தார்கள் மேலும் ஆட்ட நாயகனாக சுவர்ணராஜ்சும் தொடர் ஆட்ட நாயகனாக தர்சனும் சிறந்த கோல் காப்பாளராக பிறேம்ராஜ்சும் தெரிவாகியுள்ளனர்
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
