Search

சூட்டுச் சம்பவத்தில் பலியான இளைஞனின் ஊர் கலிகை தொடக்கம் வேம்படி வரை வீதிகளில் பற்றி ஏரிகிறது ரயர்கள்

சூட்டுச் சம்பவத்தில் பலியான இளைஞனின் ஊர் கலிகை தொடக்கம் வேம்படி வரை வீதிகளில் பற்றி ஏரிகிறது ரயர்கள்…அன்பான நண்பர்களுக்கு!வடமராட்சி துன்னாலைப் பகுதி இளைஞன் நேற்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதனையடுத்து அப்பகுதி நிலவரம் தற்போதும் மிக மோசமாக உள்ளது.கொடிகாமம் பருத்தித்துறை வீதி மற்றும் சாவகச்சேரி பருத்தித்துறை வீதியை பயன்படுத்துவதை நாளையும் தவிர்த்துக் கொள்வது பாதுகாப்பானது.இன்று இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாளைய தினமே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இன்று செய்திசேகரிபபுக்காக முள்ளிப் பகுதிக்குச் சென்று மிகவும் மிகவும் அபாயகரமான நிலையில் மீண்டேன்.வீதிகள் தோறும் மறியல்கள் போட்டு மிகவும் மதுபோதையில் பயணிப்போரின் சாரதி அனுமதி பத்திரத்தை பறித்து பார்த்து வருவதுடன் கைகளில் பொல்லுகளுடன் நிலைதெறித்த நிலையில் உள்ளார்கள்.நாளை மறுதினம் வரை குறித்த பகுதியை பயண்படுத்துவதை தவிர்க்கவும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *