இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து இந்தியா இன்னமும் உறுதியான நிலைப்பாட்டை வெளியிடாது மதில் மேல் பூனையாக இருந்தே வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்தியா இன்னமும் உறுதியான நிலைப்பாட்டை வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனது ஆலோசனையினில் மனித உரிமை விவகாரங்களில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் அது குறித்து அமெரிக்காவிடம் தெளிவுபடுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனை கௌரவப் பிரச்சினையாக கருதாது, மனிதாபிமான பிரச்சினையாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துமுள்ளார்.இந்நிலையினில் திரை மறைவினில் இலங்கையை காப்பாற்றிவிட இந்திய மத்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
அவ்வகையினில் சுப்பிரமணிய சுவாமியின் விஜயம் மற்றும் இரகசிய ஆலோசனைகளை அள்ளிவீசும் இந்திய மத்திய அரசு இலங்கையின் கோபத்தை தவிர்க்க தொடர்ந்தும் மௌனத்தை காத்தே வருகின்றது.