பாக்லாந்து தீவுகளை இங்கிலாந்தும் அர்ஜெண்டினாவும் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர் நடந்தும் அர்ஜெண்டினா இந்த பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் அர்ஜெண்டினா திடீரென பாக்லாந்து மீது படையெடுக்கலாம் என கருதி இங்கிலாந்து இராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாக்லாந்து மக்கள் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என்பதை அறிய இங்கிலாந்து வாக்கெடுப்பு நடத்தியதில் 99.8 சதவீத மக்கள் இங்கிலாந்துடனேயே இருக்க விரும்புவதாக வாக்களித்து உள்ளனர். ஆனால் இதை அர்ஜெண்டினா ஏற்க மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அர்ஜெண்டினா ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னான்டஸ் கூறியதாவது: இந்த வாக்கெடுப்பை நாங்கள் அங்கீகரிக்கவில்லை, இது சட்டப்பூர்வமான வாக்கெடுப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் பாக்லாந்து எங்களுக்கு சொந்தமானது. இந்த பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கூறினார்.