அமெரிக்க ஆதரவு தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி

அமெரிக்க ஆதரவு தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி
அமெரிக்க ஆதரவு தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் மென்மையாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
தீர்மானம் மென்மையாக்கப்பட்டதன் மூலம், வடக்கு தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் அனுமதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ஆதரவு தீர்மானத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை என சுட்க்காட்டியுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக கால அவகாசத்தை கோரி வருவதாகவும், இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.