தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன் நடைபெற்ற பொராட்டம்.
தமிழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்திற்கான புரட்சிப் போராட்டத்திற்க்கு ஆதரவாக 20.03.2013(புதன்கிழமை) மாலை பிருத்தானியத் தமிழ் மாணவர்களால் இன்னுமோர் புரட்சிப்போர் முன்னொடுக்கப்பட்டது. இப்பொராட்டம் மாலை நான்கு மணியளவில் Grosvenor Square பகுதியில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன்னிலையில் நடபெற்றது.
இதில் பெரும்பாலன தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் “நாங்கள் தமிழக மணவர்களை ஆதரிக்கின்றோம், அமேரிக்காவே இன அளிப்பை ஆதரிக்காதே, உலக நாடுகளே LLRC அறிக்கையை நிராகரி மற்றும் தமிழர்களுக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு” போன்ற வசனங்களையும் தாங்கியவண்ணம் இப்பொராட்டம் நடைபெற்றது. போராடத்தின் இறுதிவரையில் கலந்துகொண்ட மணவர்கள் இப்பொராட்டம் ஒரு சாதரன ஆரம்பந்தான் தமிழருக்கான தீர்வான தனித் தமிழீழம் அமையும் வரையில் இனி உலகம் முழுவதும் தொடர்ந்தும் மணவர் புரட்சி வெடித்துக்கொண்டே இருக்கும் என்று சபதம் எடுத்து கலைந்துசென்றனர்.