தாக்குதல் அரச துணையுடனேயே நடத்தப்பட்டது – கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

தாக்குதல் அரச துணையுடனேயே நடத்தப்பட்டது – கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் நேற்று நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரசினதும், அரச படைகளினதும் துணையுடன் நடத்தப்பட்ட அராஜகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் மக்கள் கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வீதியால் ஊர்வலமாக வந்து எம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த ஊர்வலத்தை நடத்துவதற்குத் தாம் அனுமதி வழங்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அப்படியிருந்தும்  பொலிஸ் நிலையத்தைத் தாண்டி, வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் துணையுடன் எவ்வாறு ஊர்வலம் நடந்தது?
எம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பொழுது இங்கிருந்த  பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை மக்கள் பிடித்துக் கொடுத்த போதும் பொலிஸார்  அவர்களை விடுவித்து விட்டனர்.
இந்தத் தாக்குதல் அரசினதும், அரச துணைப் படையினரின் ஆதரவுடனும் நடத்தப்பட்டதென்பது இதிலிருந்து தெரிகின்றது .வன்முறையைத் தூண்டுவது யார் என்பதை மக்கள் இதிலிருந்தே இனங்கண்டு கொள்ள வேண்டும். கடந்த கால வரலாற்றிலும் இதுவே நடந்தது  என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.