
இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் இந்திய அரசே.. மரணம் தான் முடிவா தமிழினத்திற்கு.. வாக்காளர் அடையாள அட்டை இனி எதற்கு என்ற பதாகை ஏந்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்கச் சென்று தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அங்கிருந்த அலுவலரிடம் கொடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் மீண்டும் அடுத்த வடிவம் பெறும். தனித் தமிழ் ஈழம் பெறும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது என்றனர் போராட்ட மாணவர்கள்.