பூந்த மல்லி சிறப்பு முகாமில் உண்ணா நிலையில் இருக்கும் சாந்தகுமாரின் உடல் நிலை தற்போது கவலைக் கிடமாக உள்ளது. இவரது ஒரே கோரிக்கை சிறப்பு முகாமில் வாடும் ஈழத் தமிழர்கள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப் படவேண்டும், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஆகும். சந்திர குமாரின் மனைவி மற்றும் அவரது இரு குழந்தைகள் இவரை பார்க்க முகாமிற்கு வந்த போது அவர்களை பார்க்க அனுமதிக்காமல் பொலிஸார் தடுத்தனர்.
அனுமதி மறுக்கப்பட்ட உடன் சாந்தகுமாரின் மனைவி அதே இடத்தில் அமர்ந்து போராடினார். ஒரு இரவெல்லாம் வெளியில் குழந்தைகளுடன் கிடந்தார். பின்பு பொலிஸார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
இதை கேள்விப் பட்ட சந்திரகுமார் தூக்க மாத்திரைகள் நிறைய உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை சக முகாம் வாசிகள் காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
உடனே அவரை அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து சென்று காப்பாற்றிய பொலிஸார் மீண்டும் அவரை முகாமில் கொண்டு வந்து அடைத்தது. சந்திரகுமாரின் மனைவி குழந்தைகள் புழல் சிறையில் இருந்து விடுதலை அடைத்தாலும் சந்திர குமார் இன்னும் அவரது உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடவில்லை.
எட்டாவது நாள் ஆகியும் அரசு தரப்பில் இருந்து யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இவரது உண்ணா நிலையை முடித்து வைக்க ஒருவரும் முன்வரவில்லை.
இந்நிலையில் இவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் இனி என்ன நடக்கும் என்று தெரியாமல் அவரது குடும்பத்தார் வேதனையில் உள்ளனர்.