
மேலும் சிரியாவின் 52 பகுதிகளை தாம் அவதானித்ததில் 59 சட்டவிரோத தாக்குதல்கள் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சிரிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் காரணமாகவே சுமார் 70 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 2011 ஆண்டு ஒக்டோபர் மாதம் மற்றும் 2012 ஆண்டின் ஜூலை மாதங்களுக்கிடையில் ஐ.நா பாதுகாப்பு பேரவை மூன்று தீர்மானங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.