நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சுரேஷ்!

நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சுரேஷ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்தின் சீஜடி விசாரணைக்காக 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் சுரேசிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் அதற்கு வருமாறும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (13) சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடையத்தை அவர் தெரிவித்தார்.

கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியூடாக குற்றவியல் விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு அதிகாரி எஸ்.கே.சேனாரட்ன என்பவரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

சீஜடி விசாரணை இதுதான் தனக்கு முதல் தடவை எனவும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைப்பதற்கு தங்களுக்கு உரிமை இல்லாத ஒரு ஜனநாயக சூழலில் வாழ்வதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

நேற்று 12ம் திகதி விசாரணைக்கு வருமாறு 11ம் திகதி இரவு அழைப்பு கிடைத்ததாகவும் நேரம் போதாமையால் நேற்று விசாரணைக்குச் செல்லவில்லை எனவும் மற்றுமொரு திகதி கேட்கப்பட்டுள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.