வல்வெட்டித்துறையை சேர்ந்த விமலதாஸ் சக்திதாஸ் யாழ் பல்கலைக்கழக கல்லூரியில் உயர் டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்டு,
கட்டிட நிர்மாண தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா பட்டத்தை பெற்றுள்ளார்.
மேற்படி பட்டமளிப்பு விழா கடந்த 03/01/2019 அன்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகக்கல்லூரியில் இருந்து உயர் தேசிய டிப்ளோமா பட்டம் பெறும் முதலாவது பிரிவு இதுவாகும்.
வல்வையில் இருந்து மேற்படி பிரிவில் பட்டம் பெறுபவர் இவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பிரித்தானிய வல்வை நலன்புரி சங்கம், வல்வை மக்கள்,vvtuk.com இணையம்,அனைத்துலக வல்வை நலன்புரி சங்கங்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.