போர் மூண்டால் முதலில் ஜப்பானின் தலைநகரை தகர்ப்போம்: வடகொரியா எச்சரிக்கை

போர் மூண்டால் முதலில் ஜப்பானின் தலைநகரை தகர்ப்போம்: வடகொரியா எச்சரிக்கை

வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோ முழுவதும் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வடகொரியாவை கடுமையாக தாக்கவும் ஜப்பான் தயாராகிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், நாங்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டால், முதலாவதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தாக்கி அழிப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு ஜப்பான் இடமளித்துள்ளதால் கோபமடைந்து இருக்கும் வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அச்சத்தில் ஜப்பானிய அதிகாரிகள் உள்ளனர்.

கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை என்பது அணு ஆயுதக்குறைப்பு குறித்ததாகவே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.