முகமாலையில் மிதிவெடி அகற்றலை ஆய்வு செய்த ஜப்பான் அதிகாரிகள்

முகமாலையில் மிதிவெடி அகற்றலை ஆய்வு செய்த ஜப்பான் அதிகாரிகள்

முகமாலையில் மிதிவெடி அகற்றலை ஆய்வு செய்த ஜப்பான் அதிகாரிகள்

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானியத் தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த ஜப்பான் குழுவினர் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன், அங்குள் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, வேம்பொடுகேணி, கிளாலி ஆகிய பகுதிகளில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவான சார்ப் அமைப்பின் ஊடாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.