பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மறுமலர்ச்சி மாணவர் பாசறையின் சார்பில் வைகோ புத்தகம் மற்றும் உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, மே பதினேழு இயக்க ஒருங்கினைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய வைகோ, பேரறிவாளன், முருகன், சாந்தன் உயிரைக் காப்பாற்ற தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.