இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி வெளியானது – முழு விபரம் உள்ளே

இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி வெளியானது – முழு விபரம் உள்ளே

கொரோனா சூழ்நிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் யூன் மாதம் 29ஆம் திகதியுடன் திறக்கப்பட உள்ளது.

ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். எனினும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் பாடசாலைகள் 4 கட்டங்களாக திறக்கப்பட உள்ளன.

முதற்கட்டம்

இதன்படி ஜூன் 29ஆம் திகதி முதற்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை அதிபர், ஆசிரியர் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வருகை தரவுள்ளனர்.

இரண்டாவது கட்டம்

இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக ஜூலை 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது தரம் 13, தரம் 11, தரம் 5 ஆகிய வகுப்புகள் ஆரம்பமாகும்.

மூன்றாம் கட்டம்

ஜூலை 20ஆம் திகதி 12 மற்றும் 10ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

நான்காம் கட்டம்

ஜூலை 26ஆம் திகதி தரம் 3,4,6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.

முதலாம், இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் .

அத்துடன், உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டம்பர் 7ஆம் திகதி முதல் அக்டோபர் 6ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறும்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இணைய வழிக் கல்வியை எதிரியாக பார்க்க வேண்டாம் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.