வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் இரண்டாம் நாள் இரவு திருவிழா கற்பக விருட்சம்.சிறப்பு அம்சங்களும்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் இரண்டாம் நாள் இரவு திருவிழா கற்பக விருட்சம்.சிறப்பு அம்சங்களும்

திருசிற்ம்பலத பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் பல சிறப்பு திருவிழாக்கள் இவ்வாலயத்தில் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் தண்டிகை திருவிழா வேட்டைத்திருவிழா தீப்பந்த திருவிழா சப்பறம் தேர் தீர்த்தம் பூங்காவனம் என்ன சிறப்பிக்கும் திருவிழாக்களும் இவ்வாலயத்தில் பழமை வழமை சிறப்பம்சங்கள் ஆகும்

அடியவர்களை நோக்கினாலும் இனிவரும் சிறப்பான திருவிழாக்களில் பெரும் திரளானோர் வருகை தந்து வழிபடுவதனையும் காணக்கூடியதாக இருக்கும்.வல்வையில் முப்பெரும் கோவில்களில் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும்.

ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் விநாயகப்பெருமான் அமர்ந்திருப்பது போன்று இவ்வாலயத்திலும் குளக்கரையில் அமைந்திருக்கின்றார்.

கடற்கரை மிகவும் அண்மித்த பகுதியாக இருப்பினும் குடிநீர் மிகவும் சுவையான ஆலயமாக இருக்கின்றன.

விநாயகா ஆலயங்களில் கூடுதலாக வில்வ மரங்கள் இப்பில் மரங்கள் காணப்படுவது வழமை இங்கு நாகதாளி பூ மரம் சிறப்பாகக் காணப்படுகின்றது.

இவ்வாலயத்தில் மற்றுமொரு சிறப்பம்சம் வல்வெட்டித்துறை பூராகவும் இருக்கின்ற இந்து ஆலயங்கள் வல்வெட்டித்துறை ஊறணி இந்து புனித தீர்த்த கடற்கரையில் தீர்த்தமாடிய பின்னர் கணபதி தரிசனம் நடைபெறுவதும் இவ்வாலயத்தில் சிறப்பம்சமாகும்.

இவ்வாலயத்தில் வட இலங்கை புகழ் கணபதி மீன் அமைப்பாளர்களும் இங்குதான் இருப்பது சிறப்பம்சமாகும் இந்த வல்வெட்டித்துறைக்கே.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *