வல்வை செய்திகள்

மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகம் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் மற்றுமொரு பெருந்திருப்பணியானது இன்று அடிக்கல் நாட்டு வைபவத்துடன் மிக சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ளது.

மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகம் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் மற்றுமொரு பெருந்திருப்பணியானது இன்று அடிக்கல் நாட்டு வைபவத்துடன் மிக சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ளது.

மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ,அவுஸ்ரேலியாவில் வாழ்பவருமான வைத்திய நிபுணர் கமலாகரன் அவர்களின் பேருதவியில் இப்பாரிய திருப்பணி நடைபெறவுள்ளது.

திருக்குறள் முழுவதும் காட்சிப்படுத்துவதுடன், திருக்குறள் ஆய்வு நூலகம், மற்றும், திருக்குறள் ஆய்வு அரங்கம்,தியான நிலையம் எனப்பல விடயங்கள் மக்கள் பயன் பெறும் வகையில் அமைக்கப்படவுள்ளது. மாவை ஆதீனகர்த்தா அவர்களின் ஆசியுடன் அடிக்கல் நாட்டு வைபவம் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது….

கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் சேவையானது இன்னும் மேன்மேலும் சிறப்பாக சமய,சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு மனப்பூர்வமாக ஒத்துழைப்பதுடன் அவரின் சேவையானது இன்னும் தொடர துர்க்கை அம்மனின் அருள் கிடைக்க எனது மனப்பூர்வமான ஆசிகள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *