4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசய பெண்

4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசய பெண்

பிரிட்டனை சேர்ந்த ஜெஸ்சிகா கர்பே(20) என்பவருக்கு வயிற்றின் வலது பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் டொக்டரை சந்தித்துள்ளார்.

அப்போது சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், சிறுநீர் தொற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அதற்குரிய மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. ஆனாலும் நோய் குணமாகவில்லை.

எனவே, அவரது சிறுநீரகம் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது வலது புற சிறுநீரகத்துடன் 7 செ.மீற்றர் கட்டி இருப்பதை டொக்டர்கள் பார்த்துள்ளனர்.

இதை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், அவருக்கு வலப்புறத்தில் 2 சிறுநீரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அறுவைசிகிச்சை செய்து அவற்றுடன் வளர்ந்த கட்டி அகற்றப்பட்டது. இதற்கிடையே, அறுவைசிகிச்சையின் போது இடது புறத்தில் மேலும் 2 சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்தது.

இதன் மூலம் ஜெஸ்சிகாவின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்று 4 சிறுநீரகங்களுடன் ஒரு மனிதன் உயிர் வாழ்வது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.