Search

புத்தர் சிலை மட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்கும் – அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்து வழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து அவர் தெரிவித்த கருத்து வருமாறு :

“மட்டக்களப்பு மாவட்டமானது முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமாகும். இங்கு மேலதிகமாக புத்த சிலைகளை நிறுவவேண்டிய அவசியம் இல்லை.

மட்டக்களப்பு, மங்கலராமய விகாராதிபதியின் ஏற்பாட்டில் ஊறணியில் உள்ள மட்டக்களப்பு நுழைவாயிலுக்கு அருகில் புத்த சிலை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்வதுடன் இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

இந்த புத்தசிலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்படவேண்டும். இல்லையென்றால் அதனை தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்யும்.

தற்போது மட்டக்களப்பு நகரில் புத்தர் சிலை அமைப்பதற்கான தேவை எதுவும் இல்லாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *