ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது – TNA

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்ற நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்குவாத பௌத்த பெரும்பான்மைவாதம் மேலோங்கியுள்ள தற்கால சூழ்நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின்வெது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச தீர்வுத் திட்டம் தொடர்பிலான தமது கட்சி நிலைபாடு விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் சில பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையிலும் அதற்கான பதில் எதனையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்ற வேண்டுமாயின் படையினரை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து வந்த போதிலும், இதில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *