சிரியாவிற்கு ஆயுதங்களை வழங்கவேண்டாம்: அமெரிக்கா, ஜேர்மன் கோரிக்கை

சிரியாவிற்கு ஆயுதங்களை வழங்கவேண்டாம்: அமெரிக்கா, ஜேர்மன் கோரிக்கை

சிரிய அரசாங்கத் துருப்பினர்களுக்கு நவீன ஆயுதங்களை வழங்க வேண்டாம் என அமெரிக்காவும் ஜேர்மனும் ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ரஷ்யா ஆயுதங்களை வழங்கும் சந்தர்ப்பத்தில் சிரியாவின் நெருக்கடிகள் தீவிரமடைவதுடன், இஸ்ரேல் உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக மாறும் என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிரியாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பை இந்த செயற்பாடுகள் இல்லாமல் செய்துவிடும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விமான எதிர்ப்பு ஆயுதங்கள் சிலவற்றை ரஷ்யா சிரியாவுக்கு வழங்கியுள்ள நிலையில், ஜேர்மனும் அமெரிக்காவும் கருத்துத் தெரிவித்துள்ளன.

ஹிஸ்புல்லா உள்ளிட்ட சில ஆயுதக் குழுக்கள் சிரிய அரசாங்கத்துடன் இணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றன.

இதன் காரணமாக சிரியாவில் மிக மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.