சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் உள்ள கபார் ஹம்ரா கிராமத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 10 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அலெப்போ பகுதியில் முகாமிட்டுள்ள போராளிகளை குறிவைத்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை வழிமாறி கிராமத்துக்குள் விழுந்துவிட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘அலெப்போ நகரில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் உள்ள போராளிகளின் தலைமையிடமாக கருதப்படும் அஜாஸ் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் சிரியா படைகள் கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனையடுத்து, கபார் ஹம்ரா கிராமத்தை கைப்பற்றி விட்டால் நுபுல் பகுதி வழியாக போராளிகளின் முகாம்களை அழித்து விடலாம் என்று கருதும் அரசுப் படைகள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றன’ என இந்த தாக்குதலை நேரில் பார்த்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போர் கண்காணிப்பாளர் ஒருவர் கூறினார்.